07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 30, 2013

பண்டைய எகிப்திய மின் விளக்குகளும் விடை தெரியா மர்மங்களும்

அனைவருக்கும் வணக்கம், இன்றைய பதிவில் எகிப்தில் இருக்கும் சுவர் கற்சித்திரம் குறித்த தகவல்.

எகிப்தில் டெண்டீரா வளாகப் பகுதிகளில் நடத்தப் பட்ட ஆய்வின் போது ஆராய்சியாளர்களை  ஆச்சர்யத்தை உண்டாக்கின சுவரில் செதுக்கப் பட்டு இருந்த கற்சித்திரங்கள். நிலவறைகளில், இரகசிய பெரிய அறைகள் மிகவும் பாதுகாக்கப் பட்ட பகுதிகளாகவும், அரசர் மற்றும் மிக முக்கிய மத போதகர்கள் மட்டுமே அனுமதிக்கப் பகுதியாகவும் இருந்திருக்கும் என நம்பப் படுகிறது.

அங்கு அவர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் கொடுத்த செதுக்கப்பட்ட கற்சித்திர (கற்சிலை) வடிவம் ஒன்று,  அது இப்போது நமக்கு பரிசயமான ஒன்றாக இருக்கும் இருந்த பொருளை பிரதிபளிப்பதாக இருந்த  அதை பார்த்த போது மின் விளக்கு போன்று இருந்தது.

அந்த காலத்திய மின்விளக்கு சித்திரங்கள் எப்படி?

எகிப்தியர்கள் மின் விளக்கு பயன் படுத்தி இருப்பார்களா?

இருட்டான நிலவறைகளில் எப்படி வெளிச்சத்தை கொண்டுவந்து இருப்பார்கள்?

டார்ச் போன்ற உபகரணங்களை உபயோகப் படுத்தி இருப்பார்களா?

பக்க சுவர்களில் மட்டுமல்ல கூரைச் சுவர்களிலும் செதுக்கப்பட்ட சித்திரங்கள் காணப்பட்டன.


எகிப்திய பிரமீடுகளின் உட்புற அறைகளுக்கு, மிகப்பெரிய தாமிரக் கண்ணாடி பொருட்களை உபயோகித்து, சூரிய ஒளியை பிரதிபளிக்க செய்து வெளிச்சத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். விளக்குகளையோ மெழுகு வர்த்திகளோ ஏன் சிகர் லைட்டர்களோ கீஸா அறைகளில் எரியவில்லை. அப்படியானால் செயற்கை விளக்குகளை அவர்கள் பயன் படுத்தி இருக்கிறார்கள்.







தெந்தேரா அறைகளில் உள்ள மின்விளக்கு சுவர் செதுக்கு சிற்பத்தை ஆராய்ந்த போது தாமரை வடிவிலான அடிப்பாகமும் அதை சுற்றி பல்பு போன்ற உருவமும், நான்கு பேர் அதை தாங்கி பிடிப்பது போன்றும், பல்ப் உருவத்தின் உள்ளாக பாம்பு உருவமும் செதுக்கப் பட்டு இருந்தது.

அடுத்த கேள்வி சரி மேற்படி செதுக்கல் சிற்பம் ஏன் பிரமீடுகளின் உள் காணப் படவில்லை.  இந்த தொழில் நுட்பம் மிக ரகசியமான ஒன்றாகவும் தெந்தேரா ரகசிய கருவறைப் பகுதி போல அங்கு அமைக்கப் பட்டு இருப்பதற்கான முக்கிய காரணமும் இருந்திருக்கலாம். அடுத்து வரும் வாரிசுகளுக்கு இதை தெரிவிப்பதற்காகவும் இதை செதுக்கி வைத்திருக்கலாம்.

இன்னொரு முக்கிய கருத்து வேற்று கிரக வாசிகள் பிரமிடின் தொழில் நுட்பத்தையும், இது போன்ற பல நுட்ப ரகசியத்தையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் என்பது, ஆய்வுகள் தொடர்கின்றன. வேற்று கிரக வாசிகள் பூமியோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என அது குறித்து 1968 ல் தொடங்கி இன்னும் களஆராய்ச்சி செய்து நூல்களை (chariots of the gods) எழுதிவருகிறார் பிரபல ஜெர்மன் எழுத்தாளர் எரிக்வான் டேனிக்கன்.


மின்விளக்கு இருந்திருந்தால் மின்சாரம் இருந்திருக்க வேண்டும் அதற்கு மின் கலன்களை உபயோகித்து இருப்பார்களோ ? மின்சாரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப் பட்டதாக சொல்லப்படுவது சரியா?

மின் கலன்கள் எனும் போது பாக்தாத் பேட்டரிகள் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். பாக்தாத் பேட்டரிகளை பற்றி தகவலுடன் சொல்லப்படுவது அகத்தியர் காலத்தில் இது இருந்திருக்க வேண்டும் என்பது ஆனால் இதற்கு இது போன்ற ஆதாரம் கிடைக்கவில்லை (இரசவாத பாடலை மட்டுமே ஒரு சாரர் ஆதாரம் காட்டுகிறார்கள்) பாக்தாத் பேட்டரி பற்றிய விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

எகிப்தியர்கள், ரோமானியர்களோடு இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வாணிக தொடர்புகள் இருந்திருக்கிறது. இந்த பதிவு குறிப்பாக அக்காலத்திய எகிப்திய மின் விளக்கு பற்றிய ஒரே ஒரு தகவலுக்காக மட்டுமே.

Link for bagdad battery ;

       http://eniyavaikooral.blogspot.in/2013/05/blog-post_19.html
     
                                  * * * * *


பரண்மேல் கிடந்த நான் வரைந்த ஓவியங்களை , மொபைலில் பிடித்து வடிவமைத்து கொடுத்தாள் எனதன்பு மகள்  

உன் கண்ணே உன்னை ஏமாற்றினால் !


இரண்டு பெட்டிகளின் தோற்றம. பார்பதற்கு இரண்டும் வெவ்வேறு நிறங்களில் இருக்கிறது,  அம்பு குறிகாட்டும் பகுதியில் உங்கள் விரலை மறைத்து பாருங்கள்.

பின்புலத்தின் நிறமே தோற்ற பிழைக்கு காரணம். ஆங்கிலத்தில் ஆப்டிகல் இல்யூசன் என்கிறார்கள்.

இனி, இன்றைய பதிவர்களை பார்போம்.

தொலைக்கப்பட்ட தேடல்கள் -சிறுகதை தொகுப்பு புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார் எழுத்தாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களின் வலைப்பக்கம் : அதீத கனவுகள்

இந்த பதிவுகளை படித்து பாருங்கள்

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை  -அறிவியல் தொடர்  

பெண்ணியமும் கன்னியமும் - சிறுகதை 

                                                                     * * * * *

2011 ல் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதிய இவர் அதன் பிறகு தற்போது அக்டோபரில் ஒரு பதிவு எழுதி இருக்கிறார் தொடந்து எழுத உங்களின் பின்னூட்டம் ஊக்கப் படுத்தும் என நம்புகிறேன்.
வலைப்பதிவு பக்கம் : அம்மாக்களின் பகிர்வுகள்.

தொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை


                                                                    * * * * *

பட்டாம்பூச்சி.. என்ற பதிவோடு நிற்கும் ஒரு தளம் அன்பை விட ஆயுதம் ஏதும் இல்லை .  பதிவர் சிவசங்கர்

                                                                   * * * * *

மறக்கமுடியாத நினைவுகள்  தருபவர் கவிப்ரியன் இவரின்
அனுபவபதிவுகள் : கணவா? இது கனவா?! 

பிலிபைன்ஸ் - ஹயானின் கோர தாண்டவம் - புகைப்படங்கள் 

ஃபைலின் புயல் - மறக்க முடியாத அனுபவம்

உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல் ஒயாசிஸ்

                                                                * * * * *

போகிற வழியெல்லாம் புகைப்படம் எடுத்து போட்டு சம்பவ இடத்திற்கு நம்மை அழைத்து செல்லும் பாணி இவருடையது. அதோடு உணவை சுவைத்து ரசிப்பதோடு நள பாகத்தையும் சொல்லி தருபவர் நண்பர் கோவை நேரம் ஜீவா

பயணம் – சிறுமலை, திண்டுக்கல் மாவட்டம் ( SIRUMALAI, DINDIGUL )

வடுகப்பட்டி - கவிஞர் வைரமுத்து

                                                                * * * * *

ஜஸ்ட் ஐஸ்கிரீம் தானே என்று நினைக்காமல் அதன் ருசியை நம்முள் உணர வைப்பவர் நண்பர்  கடல் பயணங்கள் சுரேஷ்

அறுசுவை - பெர்ரி டி அலைவ், பெங்களுரு

சாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 2)  திரில்லான அனுவத்தை கொடுக்கிறது

இன்னும் நிறைய இருக்கின்றன வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.

                                                                   * * * * *

அப்பாவின் ஸ்கூட்டி!

இதை படிக்கும் போது சுவாரசிய அனுபவம் நமக்கு, களைப்பின் அனுபவம் அவருக்கு.  பயண அனுபவம் தந்த நண்பர் கோவை ஆவி

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!!  இந்த தொடர் எப்ப முடியும் என யாரும் கேட்பதில்லை, ஏனென்றால் அவ்வளவு சுவாரஸ்யம் உள்ள தொடர் கதை.

கடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)  இது இன்னொரு தொடர் கதை, கதை என்று சொல்வதை விட அனுபவமோ என நினைக்க தூண்டும்.

                                                                  * * * * *

அனுபவ சித்தனின் குறிப்புகள்  (கவிதைகள் ) பதிவர் ராஜா சந்திரசேகர்

                                                                  * * * * *

சோமாலிய கடற்கொள்ளையன் சொறிமுத்து (கதை ) பதிவர் பத்மினியின் வலைப்பக்கம் மின்மினி தேசம்.

                                                                 * * * * *
விரக்தியின் விளிம்பில்... கவிதை பதிவர் கீதமஞ்சரி வலைத்தளம் அவர் பெயரிலே.

                                                                * * * * *

சுட்டிப்பெண் கவிதை அளிப்பவர் அருணாசெல்வம்

                                                               * * * * *
கடந்தும் செல்வது நலமோ............பிரபல பதிவர் கவியாழி

                                                              * * * * *

இணைந்த இதயங்களின் ஓராயிரம் நன்றிகள் ...அருமை பதிவர் கரந்தை ஜெயக்குமார்
                                                             * * * * *

ஊர்ப்பேச்சு  விவரிப்பவர் நண்பர் சே.அரசன் கரைசேரா அலைகளில்.

மின்சார பிரச்சனை காரணமாக பதிவர்கள் குறித்து விரிவாக சொல்ல முடியவில்லை.

நாளை உங்கள் அனைவரையும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அன்புடன்,

கலாகுமரன்.

மேலும் வாசிக்க...

Friday, November 29, 2013

உலகின் கைவிடப்பட்ட இடங்களும் அற்புத காட்சியும்

 அனைவருக்கும் வணக்கம்,  உலகில் கைவிடப்பட்ட மக்கள் இருக்கிறார்கள், மதங்கள் இருக்கின்றன, அதுபோல இவை கேட்பாரின்றி நிராகரிக்கப் பட்ட அல்லது கைவிடப்பட்ட பகுதிகள்...பதிவிற்குள் செல்வோம்.

நீருக்கடியில் ஒரு  நகரம்

                                                 Image credits: china.org.cn

பழமையான ஒரு நகரம் ஷீசங் (Shicheng) இது புலி நகரம் எனவும் அழைக்கப்படுகிறது, இது கிழக்கு சைனா ஜீஜியங் மாகானத்தில் (Zhejiang province )இருக்கு.   இதன் ஒரு பகுதி 1959 ல் ஹைட்ரோபவர் ஸ்டேசன் உருவாக்கத்திற்காக பெரிய ஆற்றின் அடியில் மூழ்கடிக்கப் பட்டது. நீரினுள் அமிழ்ந்திருக்கும் நகரத்தின் ஒரு பகுதியை புகைப்படம் சுட்டுகிறது " வாழ்ந்து கெட்ட மனிதர்களின் சாட்சியாய்"

கப்பலில் முளைத்த மரம்



             இடம் :ஹோம்புஸ் குடா ,ஆஸ்திரேலியா Image credits: Bruce Hood

எஸ்.எஸ் ஐர்பீல்ட் (SS Ayrfield) எனும் நீராவி கப்பல் இரண்டாம் உலகப் போரின் போது பயன் பாட்டில் இருந்தது.  காட்டு பகுதியில், இது போன்ற கப்பல்கள் பயன்பாடின்றி அப்படியே விடப் பட்டன. ஏதோ காரணங்களால் இவற்றை அழிக்காமல் விட்டுவிட்டார்கள்.  "புகைப்படத்தை பார்க்க ரம்யமாக இருந்தாலும் அமானுஸ்யமாகவும் இருக்கு."


அழகிய ரயில் நிலையம்

                                image credits: John Paul Palescandolo & Eric Kazmirek

சினிமா செட்டிங் போல அழகிய வேலைப்பாடுடன் இருக்கும் இந்த இடம் நிலத்தடி ரயில் நிலையம்.   நியூயார்க் நகரத்தில் கட்டப் பட்ட மெட்ரோ ஸ்டேசன்.  இதன் அழகிற்காக இதை இடிக்காமல் வைத்திருக்கிறார்கள் போலும்.  கட்டிட வடிவமைப்பு பிற்பாடு  உருவாக்கப் பட்ட ரயில்களுக்கு பொருந்தி வரவில்லை, பாதுகாப்பு கருதி 1945 ல் இது மூடப் பட்ட, சுற்றுலா இடமாக மாறிப்போனது.

பேய்தீவு

                                          Image credits: hashima-island.com

பார்பதற்கு போர் கப்பல் தோற்றதில் இருக்கும் குட்டித் தீவு ஹாஷிமா (ஜப்பான்).  இங்கு 18 - 19 நூற்றாண்டு கால கட்டங்களில் மக்கள் நடமாட்டம் இருந்தது. அப்போது கடலடி நிலக்கரி சுரங்கத்திற்காக இத்தீவு உபயோகத்தில் இருந்தது.  நிலக்கரியில் இருந்து பெட்ரோலிய உபயோகத்திற்கு அரசின் கவனம் திரும்பியதால் இது அப்படியே விடப்பட்டது. "பேய் தீவாகிப் போனது."

ராஜாக்களின் மயானம்

                                                  Mount Nemrut, Turkey

இது அந்த கால ராஜாக்களின் மயானம், முதலாம் நூற்றாண்டை(கி.மு )சேர்ந்தது. துருக்கியில் உள்ள மவுண்ட் நெம்ரட் என்ற இடம்.
சுடுகாடும் அழகாய்த்தான் இருக்கு...

இனி பார்க்கப்போகும் இவைகள் தலைப்பிற்கு சம்பந்தமில்லாத தகவல்கள்.


 ஸ்வீடனை சேர்ந்த போர் கப்பல் வாசா 1628 ல் கடலில் மூழ்கிய இதை 1961ல் மீட்டெடுத்தார்கள்.  1600 களில் தயார்க்கப் பட்ட இது ஒன்றுதான் முழுமையாக மீதம் இருப்பதாக சொல்கிறார்கள். ஸ்டாக்ஹோமில்  இதை அப்படியே வைத்து அதை சுற்றி மியூசியம் (Vasa Museum )கட்டி வைத்திருக்கிறார்கள்.


சூரிய கடிகாரம்

மிக அரிதான பொருள் இது 16 ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க மோதிரம்.இது சூரிய ஒளியில் காட்டி விழும் நிழலை வைத்து நேரம் பார்க்கலாம். அதோடு திசைகாட்டி.  ஜெர்மனியில் இருக்கலாம் என்கிறார்கள்.


மத்திய சீனப்பகுதியில் இந்த புதைப் படிவம் இருக்கிறது. கிழக்கத்திய ஜூஹூ வம்சத்தை சேர்ந்தது( Eastern Zhou dynasty ). அந்த காலத்தில் அதிகார வர்கத்தை சார்ந்தவர்களின் சமாதியில் அவர்கள் உபயோகித்த ரதம் மற்றும் குதிரைகளோடு புதைத்திருப்பார்கள் என்கிறார்கள் தொல்லியல் துறையினர்.
இது போல ஐந்து ரதங்களும், 12 குதிரைகளும் இருக்கின்றன.
படத்தில் கல்லாகி போன படிவத்தை தண்ணீர் அடித்து சுத்தம் செய்கிறார் ஒருவர்.

இனி இன்றைய பதிவர்கள்

கூர்வாள் எனும் வலைப்பூவில் தன் எண்ணங்களோடு சிறப்பான கவிதைகளை படைத்து வருகிறார்  கயல்விழி சண்முகம், அதில் ஒரு கவிதை;

நதியாகிறாய்
அதில் உருளும் கல்லாகிறேன்
கூர்மழுங்கி
மென்மையாய்
வழவழத்துப் போனதன்
வருத்தங்களிருந்தது
ஆசையாய் அக்குழந்தையின்
கைசேரும் வரை... 

கவிதையின் தலைப்பு : கூழாங்கற்கள்


பொன்வண்ணக்காரிளை  : இது இன்னொரு கவிதை வார்த்தையின் வர்ணஜாலங்களை ரசிக்கலாம்.

பரிபோன தமது கிராமத்து வீட்டின் நினைவுகளை நம்மோடு பகிர்கிறார்

என் (கிராமத்து) வீடு

                                                                *****
ஜீவ நதி வலைத்தளம் பதிவர்  தங்கராசா ஜீவ ராஜ்
பண்டைய சோழர் வரலாற்றை பேசுகிறது இந்த பதிவு;

திரிகோணமலையிற் சோழர்கள் -பகுதி 1


                                                                *****
வலைத்தளம் :  அன்பின் வாசல்  பதிவர் : சுசிலா மாரிஸ்

வண்ண மீன் வளர்க்கறீங்களா?  இது போல பயனளிக்கும் பதிவுகள்.

                                                                *****

"நமத்துப் போய்விடாமல்
உலர்த்திக் கொண்டிருக்கிறது வெயில்
மழையின் நினைவுகளை"

கவிதை விருந்தளிப்பவர் இரா.எட்வின் அவர்கள்  நோக்குமிடமெல்லாம் நாமன்றி என்ற தளத்தில்.

கவிதைகளோடு நிலைத்தகவல்கள் ஒவ்வொன்றும் ரகசியம் பகிர்கின்றன நம்மோடு

                                                               *****
பதிவர் முட்டாநைனா வலைப்பதிவில் நகைச்சுவையாகவும் மர்மமாகவும் சென்று கொண்டு இருக்கிறது தலை இல்லா முண்டம் ... தொடர்கதையாக.

                                                              *****


அந்த தலையில்லா முண்டம் இந்த கவிதையிலும் இருக்கு

உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த உலகமா 

பிரபல பதிவரின் அம்பாளடியாள் வலைத்தளத்தில்.

                                                            *****
இவங்க கவிதை வாசித்து முடிக்கும் போது ஒரு புயலின் சீற்றம் (சமூக சாடல் ! ) நம் உள்ளத்தினுள் கடந்து போவதை உணர முடியும்

பெண் எனும் புதுமையில்

உடல் மூடும் திரை  :

மெளனத்தின் இரைச்சல் புத்தக எழுத்தாளர்  கோவை மு சரளா

                                                            *****
உரசலின் காயங்கள்
இறுக்கம் சூழ்ந்த அந்த இதயத்தின் 
மௌனத்தை உதறவைத்து  
வலியின் வார்த்தைகளைக்  
காற்றுவெளி எங்கும் பரப்ப
மகிழ்வாய் ஒடுங்கியது அது
மீண்டும் தேகத்தின் கணப்புக்குள்...
<<<<சின்ன சின்ன சிதறல்கள்  புத்தக எழுத்தாளர்  அகிலா  >>> பல்துறை வித்தகர் பலரும் அறிந்த பதிவர்.

வார்த்தைகள் இவங்களுக்கு வசப்பட்டது அவங்க சொல்படி கேட்கும் மத யானை.

கலங்கரை...  

எஞ்சியது ஒன்றுமில்லாமல்...

                                                            *****


பலபேர் பதிவே எழுதுவதில்லை இந்த பாழும் மின்வெட்டு பெருந்தொல்லை 

நான் சொல்ல நினைத்ததை கவிதையாக்கி தந்திருக்கிறார் புலவர் ஐயா இராமாநுசம் அவர்கள்.

                                                           ******

தென்றலாய் தவழ்கிறது கவிதைகள் இவர் தளத்தில் ..
  

பதிவர் : சசிகலா அவர்கள்.

பணியும் பனியும் !  

 


மீண்டும் நாளை பிரிதொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்,

அன்புடன்,

கலாகுமரன்.

                                           =====================
மேலும் வாசிக்க...

Thursday, November 28, 2013

கடலடியில் புதைந்து போன எகிப்திய நகரம்

அனைவருக்கும் வணக்கம், இது கடலடி ஆய்வை பற்றிய ஒரு பதிவு.

மெடிட்டேரியன் கடல்கொள்ளப் பட்ட புராதன எகிப்திய நகரின் இடிபாடுகள் அகழ்வாறாய்ச்சியாளர்களால் கிளரப்பட்டன.  மண்மூடி போயிருந்த ஹெரசெலியன் (Heracleion ) புராதன எகிப்திய துறைமுகப் பகுதியில் சிலைகளும், தங்க தகடுகளும் கண்டுபிடிக்கப் பட்டன.

பிரெஞ்சு கடலடி ஆராய்சியாளரான டாக்டர். ப்ரெங் கோடியோ(Dr.Franck Goddio, European Institute) மற்றும் அவரது குழுவினர் 2000 ல்  நடத்திய ஆய்வில்  கடலின் அடி மட்டத்தின் கீழாக 30 அடியில் அபெளகிர் குடா (அலெக்ஸாண்டிரியா) பகுதியில் சிலைகள் புதைந்திருப்பது கண்டறியப் பட்டது.





tks to Huffworldpost

அலாவுதினும் அற்புத விளக்கா ?





அதை தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப் பட்ட ஆய்வின் பின் கிடைத்த தகவல்கள், இந்த இடமானது (Thonis-Heracleion) உலக அளவிய துறைமுகம் மட்டுமல்ல, மத சம்பந்தமான முக்கிய பகுதியாகவும் இது இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி படுத்தப் பட்டது.

கண்டெடுக்கப் பட்ட பொருட்கள் :

64 உடைந்த  கப்பல் களின் பகுதிகள், 700 நங்கூரங்கள், தங்க காசுகள், பிரம்மாண்ட கல்வெட்டுகள்(எகிப்திய மற்றும் கிரேக்க) இவை  உலக வணிக மையம் என்பதற்கான ஆதாரங்கள்.

இவை தவிர 16 அடி உயர சிலைகள், கோவில் இருந்திருக்கும் என கருதப் படும் பகுதியில் இருந்து, சுண்ணாம்பு படிமமாக மாறிப் போன பதப்படுத்தப் பட்ட (மம்மிகளை  போல) விலங்குகள்.

இதேபோல தமிழக கடல் பகுதிகளிலும் கடல் கொள்ளப்பட்ட சங்ககால நகரமும் சிலைகளும் ,பொற்காசுகளும், இந்திய கடல் ஆராய்சியாளர்களால் கைப் பற்றப் படும் என நம்புகிறேன் (ஹையோ..சே.. பகல் கனவு !)




படகுகள் பறப்பது போல் தோற்றம் தரும் இந்த காட்சி, மினோர்காவில் (ஸ்பெயின்)  எடுக்கப்பட்டது.



படித்தால் தள்ளுபடி

பிரேஸில் நாட்டு சிறை கைதிங்களுக்கு ஒரு சலுகை இருக்காமா அதாவது ஒரு புத்தகத்தை படிச்சு கட்டுரை எழுதிக் கொடுத்தா 4 நாட்கள் அவனுடைய தண்டனை காலத்தில் சலுகை.
நம்மாளா இருந்தா என்ன செய்வான்.  யாரையாச்சும் புடிச்சு நிறைய புத்தகங்களுக்கு ரிப்போர்ட் தயார் செஞ்சு கொடுத்து ஈஸியா வெளில போயரலாம்னு நினைப்பான்.
ஆனா அதுக்கும் ஆப்பு வெச்சு இருக்காங்க என்னன்னா அதிக பட்சம் வருசத்திற்கு 48  நாட்கள் மட்டும் தான் தள்ளு படி.



சுனாமியால் அழிந்தது போக எஞ்சியிருக்கும் சோழர் கால கலங்கரை விளக்கம்.  இடம் : கோடியக்கரை (tks to wikipedia)

"எல்லோரையும் போல நானும் இருந்துவிடுவதென்பது மிகமோசமான விசயமாகவே இருக்கமுடியும். அதனை நான் வெறுக்கிறேன்."
~ ஆர்னால்டு.  (tks to Ilangovan Balakrishnan)


 "உலகத்தை மாற்ற முடியும் என நம்பிக்கொண்டிருக்கும் வேடிக்கை மனிதர்கள் தான் உண்மையில் அதனைச் செய்தும் விடுகிறார்கள்"



வண்ணத்துப்பூச்சி என்றவலைத்தளத்தில் மணிக்கணக்காக பார்த்து ரசிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சட் சட் என்று ஓரிரு வரிகளில் சேனல் மாற்றித்தருகிறார் நண்பர் ஜீவன்சுப்பு

 ஹை(ய்யோ)க்கூ..!  (ஹைகூவை இந்த அளவு யாரும் கூவலேன்னு நினைக்கிறேன் )

கண் தெரிந்தும்
தடவுகின்றான்
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவன் ....!

ஹைகூவுக்கான இலக்கணம் இதில இருக்கிறாப்பல தான் தோனுது.

பிளாக்குல ட்வீட்டு ...!

ஜவுளிக்கடை கண்ணாடி முன் புதுத்துணியை போட்டுப் பார்க்கும்பொழுது கேவி.ஆனந்த் பட ஹீரோ மாதிரி தெரியும் நான் , அதே துணியை வீட்டுக்கண்ணாடி முன் போட்டுப்பார்க்கும்பொழுது பாலா பட ஹீரோ மாதிரி தெரிகின்றேன். // கண்ணில் பிரச்சினையா , கண்ணாடியில் பிரச்சினையா ....? //
இத படிக்க இங்க சொடுக்குங்க : நிலாச்சோறு - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...! ,


கதம்ப மாலை : சாய்ரோஸ் சென்னை வலைப்பதிவர்

அறிவியல் பகிர்வுகள் படிக்க படிக்க ஓ போட வைக்கின்றன.
லியோனார்டோ டாவின்சியும், மோனலிசா புன்னகை மர்மமும் – ஒரு முழு வரலாறு!  

நெசமா இது ஒரு முழு வரலாறுதான் இத மூச்சு விடாம படிங்க. (மண்டை சூடான அதுக்கு நான் பொருப்பில்ல சும்மா..) என்னை மிகவும் கவர்ந்த ஒரு பதிவு.

உலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்  (தகவல்கள தேடி தேடி கொடுத்திருக்கார் ...இன்ட்ரஸ்டிங்)
                                                                   ****
நாம்  அறிந்திராத வரலாற்று தகவல்களையும் புகைப்படமாக அள்ளி வழங்கி இருக்கிறார் காணாமல் போன கணவுகள் ராஜி. நாம ஒரு இடத்துக்கு போறம் இந்த மாதிரி ஆய்வில் ஈடுபடுகிறோமா ? என்று நம்மை திகைக்க வைக்கிறார்.
                                                                      ****
தமிழன் மறந்து போன பறவைகள், விலங்குகளின் பெயர்கள் நம்மை திகைக்க வைக்கிறது தலைகீழ் விகிதங்களில் அசினின் ரசிகர் வவ்வால் !!!


உலைவாயை மூட முடியுமா (சமீபத்திய பதிவு)

                                                                    ****

ஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்?  நண்பர் முரளியின் மூங்கில் காற்றில்.


செப் 22 அதிசய நாள்- வவ்வாலின் கருத்துக்கு சில விளக்கங்கள்  இதுவும் ஒரு நிழல் ஆராய்சி பதிவு, ( தொடர்புடைய பதிவை  படித்தால் தான் புரியும்)

                                                                   ****
நிழலின் நீளம் அறிவோமா?  இது சமரச உலாவும் இடமே... பதிவர் சார்வாகன் அவர்களின் பதிவு.
                                                                  ****

இப்பதிவைப் படித்தால் மண்டை குளிர்ச்சியடையும்; வழுக்கைத் தலையிலும் முடி முளைக்கும்!!!  சவால் விடுபவர் பதிவர் ஜெயதேவ்தாஸ்.

                                                                 ****

அபுசி தொபசி  என்ன இது (வார்தைகளின் முதல் எழுத்து சுருக்கம்) அரசியல், புத்தகம், சினிமா,தொலைக்காட்சி,பத்திரிக்கை,சிரிப்பு இப்படி பல பரிமாணங்களையும் வாரம் ஒரு முறையாக முறையாக தரும் செல்லப்பா யோகசுவாமி அவர்களின் வலை பக்கம் செல்லப்பா தமிழ் டைரி, கிளாசிக் தகவல்கள் படிக்க சுவாரஸ்யம்.


அமெரிக்கா சுப்ரீம் கோர்ட் விவகாரங்களை இந்த லிங்கில் அலசுகிறார்

                                                            ****

நுணுக்கமாக கட்டுரைகளை தருபவர்  மூண்றாம் சுழி அப்பாதுரை அவர்கள்
சமீபத்தில்  விண்வெளிச் சாகுபடி  ரசிக்க வைத்த பதிவு

                                                            ****
மீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே..

அன்புடன்,

கலாகுமரன்.
மேலும் வாசிக்க...

Wednesday, November 27, 2013

குடியை விட நினைத்தவனை தழுவிய மரணம்

அனைவருக்கும் வணக்கம், இன்றைய பதிவு ஒரு தீர்வை எதிர் பார்கிறது, சமூக நிகழ்வை அலசுகிறது. இதில் நடைபெறும் உரையாடல் உண்மையே, சம்பவங்களும் உண்மையே.

இந்த உரையாடளில் கலந்து கொண்டவர்கள் நான், சுரேஷ் - தளிர் வலைத்தளம், எழில் - நிகழ்காலம் வலைத்தளம், மயிலன் (மருத்துவ மாணவர்) -மயிலிறகு வலைத்தளம், இன்னொரு சுரேஸ் - வீடு வலைத்தளம்.
தளிர் வலைத்தள நண்பர் சுரேஷ் ஒரு சம்பவத்தை சொன்னார்:

     " இரண்டு நாள் முன்பு கோவிலில் பூஜை செய்துவிட்டு கிளம்பும்போது வந்து நின்றான் அவன். ஒரு ஐம்பது ரூபா இருக்குமா? இருந்தும் இல்லை என்றேன்! ஒரு இருபது!.. ஒரு பத்து..! எதுக்கு என்றேன்? அவசரமாக வேணும் ப்ளீஸ் கவனி நண்பா! என்றான். இரு வரேன் என்று பக்கத்து நண்பர் வீட்டுக்குள் நுழைந்து அவரிடம் பேசிவிட்டு பத்து நிமிடம் கழித்து வந்த போதும் வாசலில் நின்றான். பரிதாபமாக இருந்தது. 1987ல் ஒன்றாக எட்டாம் வகுப்பு படித்தோம்! பத்தாவது வரை ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் நாங்கள்! அன்று அவன் ஒரு மளிகைக் கடை அதிபரின் மகன். செழிப்பான குடும்பம். இன்று வீதியில் இப்படி போவோர் வருவோரிடமெல்லாம் காசு கேட்டுக் கொண்டு இருக்கிறானாம்! திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவனது மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. கிடைக்கும் காசை குடித்து அழிக்கிறான். வியாபாரம் செய்வதில்லை! இவனுடைய அண்ணன்களும் இவனை கவனிப்பது இல்லை! ஒரு வயதான தாய் இருக்கிறாள். அவள்தான் இந்த குடும்பத்தை கவனித்துக் கொள்கிறாள். நல்ல வேளை இவன் மனைவி படித்த பெண்ணாயிருந்தும் குடும்பத்தையோ இவனையோ கை கழுவ வில்லை! இப்படி ஆக என்ன காரணமாக இருக்கும்? யோசித்தேன்! அவனுடைய தந்தை மளிகை வியாபாரம் செய்யும் போது சாராயம் காய்ச்ச வெல்லம் விற்றார். கள்ளச்சாரயம் அப்போது பேமஸ்! இவரும் திருட்டுத்தனமாய் கொள்ளை விலைக்கு விற்றார். இப்போது மகன் குடித்துவிட்டு அழிக்கிறான். ஒன்றாக படித்தவனின் இந்த நிலை வருந்த வைத்தது! # feeling sad"

கலாகுமரன் : குடிக்கு அடிமை வேறு என்ன சொல்ல முடியும். என் அலுவலகத்தில் வேலை செய்தவர் தீபாவளி அன்று இறந்து விட்டார். ஒரு வருசத்துக்கு முன்பு தான் அவருக்கு கல்யாணம் நடந்தது. இவரின் குடிபழக்கத்தை நிறுத்த நாட்டு வைத்தியம் பார்த்திருக்காங்க. அதுவே இவருக்கு எமனாகிடுச்சு. இந்த வைத்தியம் சைட் எபக்ட் ஆகிடுச்சு என்று சொல்றாங்க.

எழில் : உங்களின் பகிர்வு வருத்தமளிக்கிறது கலாகுமரன்
கலாகுமரன் : ஆங்கில மருத்துவத்தில் சைட் எபக்ட் சொல்லலாம். இது புரியல.
எழில் : நான் கேள்விப்பட்ட விஷயம் சரியான்னு தெரியாது ... அரைகுறை நாட்டு வைத்தியர்கள் பயன்படுத்தும் மருந்துகளில் ஆர்சனிக் முதலான விஷப் பொருட்கள் கலக்கறாங்களாம்

கலாகுமரன் :  ஆர்சனிக் கொடிய விசமாச்சே...சின்னவயசுல இருந்தே நண்பர் குடிச்சிட்டு இருக்கார். எல்லாம் சேர்த்துவச்சு உடம்ப பாழாக்கிடுச்சு. கடந்த ஆறு மாசமா குடியை விட்டு இருந்தார்.

எழில் : உடனடி வலி நிவாரணியாம்... கொஞ்சமா சேர்ப்பாங்களோ...
கலாகுமரன் : கடந்த ஆறு மாசமா உணவு முறையை சுத்தமா மாத்திட்டாரு. அது பயனில்ல ஆர்கன்ஸ் செயல் இழக்க ஆரம்பிச்சிடுச்சு. நண்பர்கள் சொல்றது இத நிறுத்த முயற்சி செஞ்சிருக்க வேண்டாங்கரது, இது எனக்கு இன்னும் அதிர்ச்சி கொடுக்கரதா இருந்துச்சு.

எழில் :  எத்தனையோ பேர் சில மது நிறுத்தும் முறைகள் கையாண்டு நலமாகியிருக்கிறார்களே... இவருடைய பிரச்சனை என்னவென்று தெரியவில்லை...
தெரிந்த ஒரு பையன் ஹோமியோ முறையில் ஹன்ஸ் பழக்கத்திலிருந்து மீண்டிருக்கிறானே..

கலாகுமரன் : மருந்து எடுக்க ஆரம்பிச்சப் பிறகு, கணயத்தின் சுரப்பு பாதிக்க ஆரம்பிச்சுது. வயிற்றில் நீர் கோர்க்க ஆரம்பிச்சிடுச்சு. முகம் கால்கள் வீக்கம். அதுக்கு பிறகு ஆங்கில வைத்தியர் கிட்ட போய் அத சரி செஞ்சாங்க. ஆனா பின் விழைவுகள் சரி ஆகல once failed not retrived.

எழில் :  ஓ...பரிதாபம் தான்.

கலாகுமரன் : எழில், போதை பழக்கம் வேற குடி பழக்கம் வேற.
உங்கள் கருத்து மயிலன்

மயிலன் : ஆயுர்வேதம் பக்கவிளைவுகள் அற்றது என்பது ஒரு போலி பிம்பம்.. மிளகு சாப்பிட்டால் சலி குணமாகும்.. இஞ்சிக்கும் சில மருத்துவ குணங்கள் உண்டு.. ஆனால் காரசாரமான இவை தொடர்ந்து உட்க்கொள்ளும் பட்சத்தில் மேல்உணவு குழாய்க்கு புற்றுநோய்க்கான காரணிகளாக மாறும் வாய்ப்பு உண்டு.. உடனே பொதுப்புத்தி மிளகு சாப்பிட்டால் புற்றுநோய் வருமென இதனை பொதுமைப்படுத்த பிரயத்தனப்படுத்ல் தவறு.. அலோபதி மருத்துவத்தில் நான்கு நிலை ஆய்விற்கு பின்னரே ஒரு மருந்து புழக்கத்திற்கு வரும்.. அதீத பக்கவிளைவுகள் கொண்டவை புழக்கத்திற்கு வருவதேயில்லை.. தவிர சில மருந்துகள் வெளி சந்தைக்கு வந்தப்பின் எதிர்பாரா பக்கவிளைவுகள் வந்துவிட்டால் உடனே பின்வாங்க படுகிறது... இதனை அங்கீகரிக்க கட்டுப்பாடு குழுக்கள் இருக்கின்றன.. ஆனால் ஆயுர்வேத்த்திற்கு வரையறுக்கப்பட்ட ஆய்வுகளும் தணிக்கைகளும் மிக குறைவு.. காலந்தொட்டு நம்பப்படும் பக்கவிளைவற்ற மருத்துவ வடிவம் இன்றும் ஏற்றுக்கொள்ளப்படுவது அறியாமை,, பக்கவிளைவுகள் ஆய்வுகள் பெரிதாய் நடப்பதில்லை.. செடிகளை மருந்து என நம்பும் கூட்டம் அரளியும் ஒரு செடி என்பதை மறந்துவிடுகிறது... மேலும்,ஒரு நண்பர் இங்கே சொல்லியிருப்பது போல போலி புல்லுருவிகளின் அயோக்கியத்த்தனமும் இதற்கு காரணம்.. விஷ தாதுக்களை கணிசமான அளவு கலந்து கொடுத்த்து உறுப்புகளை காலிபண்ணுகிறார்கள்.. மேலே இறந்ததாய் கூறப்பட்டவருக்கு குடியால் கெட்ட உறுப்புகளை இந்த தாதுக்கள் முழுதும் நாசமாக்கி இருக்கும்... லெட், காப்பர், ஆர்சீனிக் என எல்லாமே கல்லீரலையும் சிறுநீரகத்தையும் சீக்கிரம் செயலிழக்க வைக்கும்...


கலாகுமரன் :
நன்றி மயிலன்...சுரேஸ்குமார், குடி பழக்கத்தை விட்டுடலாம்னு நினைக்கிறவங்களுக்கு உங்க அட்வைஸ்.

(வீடு வலைத்தளத்தள பதிவர் )

குடிய நிறுத்த சொல்லுகின்ற அனைத்து வைத்தியங்களும், பிளாட்பார மூலிகை அரைகுறை வைத்தியர்கள்தான், எந்த போதையையும் நிறுத்துவதற்கு ஆயுர்வேதத்தில் மருந்து கிடையாது...அத்தனையும் பக்கா பிராடு! அலோபதியில் மட்டும்தான் அதற்கான சிகிச்சையுள்ளது..அதுவும் அனைவருக்கும் ஏற்றது அல்ல...சாதாரண புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த எடுக்கப்படும் அலோபதி மருந்தே பக்கவிளைவுகளை சிலருக்கு ஏற்படுத்தும். மனபயிற்சி, தியானம், யோகா போன்றவை பலன் தரும்.

இப்ப உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்தில இருக்கீங்க உரையாடல் எப்படி எங்கே?
இதுக்கு தான் மார்க் நமக்கு முகபுத்தகம் (Face Book) சமூக  தளத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்காரே உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்கு உடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியுமே.

இங்கு வெளியிடப்பட்ட  கருத்துக்கள் அவரவர் சொந்த கருத்தே, உங்களுக்கும் இதில் மாறுபட்ட கருத்து அல்லது முரண்பாடு இருக்கலாம், இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். எந்த ஒரு மருத்துவரையோ மருத்துவத்தையோ இழிவு படுத்தும் நோக்கம் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.

* * * * *

நேற்று இரண்டு படங்கள் போட்டு இருந்தேன் அதில் முதலாவது ஒரே படத்தில் உள்ளீடாக (ஒன்றினுள் ஒன்றாக) விலங்குகளின் நிழல்கள் உள்ளன. யானை மேலே ஒரு மனிதனும் இருக்கிறான். அதில் கேட்கப் பட்ட கேள்வி எத்தனை விலங்குகள் உள்ளன.

மிருகம் vs மனிதன்

இதற்கு அறிவியல் பூர்வமான விவாதத்தின் படி, இயற்கையின் படைப்பில் மிருகமும், மனிதனும் இவ்வுலகத்தின் தோன்றிய உயிர்கள். விலங்குகள் ஒவ்வொன்றும் மில்லியன் ஆண்டுகளாக தோற்ற மாறுபாடும் வளர்ச்சியும் பெற்று வந்துள்ளன. விலங்குகளின் பிற்பாடு மனிதன் தோன்றி இருக்க வேண்டும் (டார்வின் கோட்பாடு)

மனிதன் மற்றும் மிருகம் இவற்றிற்கான வேறுபாட்டை ஈ.வே.ரா பெரியார்  கூறிய கருத்துக்கள் :

மனிதன் விலங்குகளிலிருந்து எந்த அளவு வேறுபட்டுக் காணப்படுகிறான் ? என்று சிந்திக்கோனும், மனிதன் என்பவன் மிருகங்களை, பறவைகளைவிட அறிவு அதிகம் பெற்றவன்; சுற்றுச் சார்புக்கு ஏற்றவாறு தனது அறிவின் காரணமாக மாற்றி யமைத்துக் கொண்டு வாழ்பவன் அவன் தான் மனிதன்,  ஆனால் இன்று நடப்பதென்ன? ஒருவனை யருவன் வஞ்சிக்கிறான் திருடுகிறான்; கொலையும் செய்கின்றான் என்றால் மனிதனுக்கும் மற்ற மிருகங்களுக்கும் என்ன மாறுபாடு இருக்கின்றது?



சரி அந்த கேள்விக்கான பதில் (8) அனைத்துமே.

அடுத்து ஒரு அணில் பிள்ளை குட்டியை கைகளில் வைத்து இருக்கிற படம். ஏதேனும் ஒரு காரணத்தினால் குட்டி அனாதையாக விடப்பட்டால் இன்னொரு அணில் பிள்ளை அதை தத்து எடுத்து பாதுகாத்து வளர்க்கும். ஆறறிவு உள்ள மனிதன் குழந்தையை குப்பை மேட்டில் வீசி செல்வதை பார்க்கிறோம். இந்த தகவல் மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு துணை பதில்.

இதே பதிலை தோழி எழிலின் பதிவில் இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன் நீங்களும் படித்து பாருங்களேன்;

நிகழ்காலம் எழில் : சமூக சிந்தனை கட்டுரைகள். 

அணில் பிள்ளை......

பெரியாரின் சிந்தனைத்துளிகள் -9


வீடு சுரேஷ் சிறுகதைகள் : சமூக சுழலை, காட்சியை நம் கண் முன் கொண்டுவருகின்றன இந்த கதைகள்.

என்பிலதனை வெயில் காயும்

மல்லி என்கின்ற ராதா 



 மயிலிறகு மயிலன் குறுங்கதைகள்:

யார் பெண்ணே நீ?

 மணிமொழியும் மரணித்த பொழுதுகளும்...

 

பாசிடிவ் செய்திகள்  என்ற தலைப்பில் சமூக அக்கரை பதிவுகளையும், வார வாரம் ஞாயிறு வித்தியாசமான புகைப்பட பகிர்வுகளையும் 

எங்கள் ப்ளாக்கில் தருபவர்  K.G. கவுதமன்

ரசித்த பதிவில் இதுவும் : சோம்னாம் ரியலிசம்!



ரசித்தவை, நினைவில் நிற்பவை என்ற டைடில் கார்டில்  அனுபவ முத்திரைகளை பதித்து வருபவர் சுப்புதாத்தா
இதுவும் காபிதான்     சமீபத்திய பதிவு
சங்கீதம் தான் தெரியல்ல, கொஞ்சம் இங்கிதமாவது வேண்டாமோ..?
அது என்ன இங்கிதம் ? (எனக்கும் தெரியல !)





இணையத்தில் படித்ததின் தழுவல்!  ஆக இருந்தாலும் சுவாரசிய தழுவல் காட்சியை இரண்டொரு வார்த்தைகளில் வவரிப்பது சுவரஸ்யம் படித்து பாருங்கள் .

நான் பேச நினைப்பதெல்லாம் பிரபல மூத்த பதிவர் சென்னை பித்தன் அவர்களின்   தேடி வந்த ஆவி! 

 கார்த்திகைப் பூத்தூவிக்
காத்திருப்போம் மாவீரரே!
பார்த்திருங்கள்! போற்றும் நம்மீழம்
புலருமே விரைந்து!
மண்ணில் உறங்கிடும் வித்துக்கள்!.. கைவேலைப்பாட்டுடன்  கவிதைகளில் நம்பிக்கையும் விதைக்கிறார்   இளமதி.

அழகான வடிவமைப்போடு திரைபாடல் வரிகள், குறள் விளக்கத்துடன் ஒவ்வொரு பதிவையும் செதுக்கி நம்மை சிந்தனை வசப்பட செய்பவர் பதிவர்களால் "பின்னூட்ட புயல்" என்ற செல்லமாக அழைக்கப்படும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அனுபவப் பதிவுகளில் ஒன்று
சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்




திடங்கொண்டு போராடு - சீனு வின்
ரயிலோடும் பாதை  அனுபவப்பூர்வமான உணர்ச்சிகளை கொட்டி தீர்க்கிறது

அதி விரைவாகவும் பலவித சப்தங்களோடு பயனித்த ரயில் இறுதியில் மெளனமாக...நிசப்த இருளில்.... என்ற என்னுடைய பின்னூட்டத்தை பதித்தேன்.



அர்த்த ராத்திரி...!(சிறு கதை)  சமூக சிறுகதை  தவறு நெருப்பின் மேல் ஆசைப்பட்ட விட்டில் மீதா?  கவிதை தளத்தில் நண்பர் சீனி.





படக்கதை வழங்கியவர் :   ஜி.டி என செல்லமாக அழைக்கப்படும் காயத்ரி தேவி
குறிஞ்சி மலர்கள்... !!!


கழுகுக்கூட்டங்கள் எனும் கட்டுரையில் அவருக்கு ஏற்பட்ட மருத்துவ அனுபவம் பற்றி  சொல்கிறார் நண்பர் ஜோதிஜி தமது தேவியர் இல்லத்தில்...



முருகானந்தன் கிளினிக் என்ற வலைத்தளத்தில் மருத்துவம் சார்ந்த பதிவுகளை வழங்கி வருகிறார் டாக்டர் M.K. முருகானந்தன்

சிந்தனைக்கு இரண்டு படங்கள்



இது கிராபிக்ஸ் படம் அல்ல ஒரு பென்சில் ஓவியம் தத்ரூபமாக வரைந்தவர் ரஷ்ய ஓவியர் ஒளேகா மெலமோரி ( Olga Melamory)

"அவன் உன் அந்தரங்க பகுதியை தொட்டானா" -  "ஆ..மா"

இந்த கார்டூன் நகைச்சுவைக்காக மட்டுமல்ல... பெண்கள் மீதான வன்கொடுமையை பட்டவர்தனமாக  குறியீடாக சாடுகிறது. (மனிதன் மிருகத்தை விட மேலானவனா...!)

மீண்டும் உங்களை நாளைய பதிவில் சந்திக்கிறேன்,

அன்புடன்,

கலாகுமரன்.


மேலும் வாசிக்க...

Tuesday, November 26, 2013

நகைச்சுவைகள்...ரசிப்போம் சிரிப்போம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், 

இன்றைய பதிவில் சில நகைச்சுவைகளையும், நகைச்சுவை பதிவர்களை பார்போம்.




ஒரு பியானோ வாசிப்பவர் முதன் முதலா ஒரு படத்திற்காக வாசித்து கொடுத்தார்.  தயாரிப்பாளரிடம் கேட்டார் “ படத்த நான் பார்காமலே வாசிச்சிருக்கேன் இந்த டியூன் போதுமா ?”
தயாரிப்பாளர் அதெல்லாம் டைரக்டர் பார்த்துப்பார்.

சரி எப்ப நான் அந்த படத்த பார்க்கலாம் படம் ரிலீஸ் செய்வாங்க அப்ப பார்துக்குங்க.

படம் ரிலீஸ் ஆச்சு, அது ஒரு மாதிரியான படம். இவரோட சேர்த்து மூன்று பேர் அவங்க ரெண்டு பேர் கணவனும் மனைவியும்.

இவருக்கு சங்கோஜமா போச்சு அவங்க கிட்ட சொன்னார்  “ நான் இந்த படத்த பார்க்க வரல என்னோட மியூசிக்க கேட்க வந்தேன்’’

கணவன் சொன்னான் நாங்களும் எங்களோட நாய் குட்டிய தான் பார்க்க வந்தோம்.

@@@@@@@@@@@@@

 நடிகை தோழியிடம் : இன்னும் ஒரு இருபத்திமூனு வருசத்துக்கு நடிச்சுகிட்டே  இருக்கனும் இதுக்கு ஏதுன்னா வழி இருக்கா?

ஒ இருக்கே சீரியல்ல நடிக்க ஒத்துக்கோ.

@@@@@@@@@@@@@

என்னய்யா இது மேடையில் சேருக்கு பதில் ஊஞ்சல் கட்டி வைச்சிருக்கு ?

அது விளையாட்டு துறை அமைச்சருக்கான சீட்டு.

@@@@@@@@@@@@@

ஓட்டு போட அப்ப எல்லாம் வாக்கு சீட்டு இருந்துச்சு
அதுக்கப்புரம் ஓட்டு மெசின் வெச்சாங்க
இப்ப ??

ஐ பேட் வைச்சிருக்காங்க

@@@@@@@@@@@@@

அவள் அவன் கன்னத்தை பார்த்து : நீங்க எத்தனை முறை சேவ் செய்வீங்க
அவன் :  ஒரு நாளைக்கு 20 - 30

அவள் : ஙே...



அவன் : என்னோட தொழிலே அதானே

@@@@@@@@@@@@@

(பெண் டாக்டரும் , வைத்தியம் பார்க்க வந்த பெண்னும்)

டாக்டர் ஏன் அந்த பேசண்ட திட்டி அனுப்பீட்டீங்க

பின்ன என்ன அவரு கதை ஆசிரியராமா எங்கிட்ட வந்து கதைக்கு கரு கிடைக்குமான்னு கேட்கறான், ராஸ்கல்.

@@@@@@@@@@@@@

ஆசிரியர்  : வெரும் வயத்தில எத்தனை இட்டிலி சாப்பிட முடியும் ?

ஒவ்வொருத்தரும் 6, 10, 12 ன்னு அடிச்சிவிட்டாங்க அதுல ஒரு பையன் மாத்திரம் சார் ஒன்னுதான் சார்.

ஆமா சார் ஒரு இட்லி சாப்பிட்டதுக்கு அப்புரம் அது வெறும் வயிரா இருக்காதே.

@@@@@@@@@@@@@

ஒன்பது நட்சத்திரங்களின் பெயர் எழுது ?

கேள்விக்கு மாணவன் எழுதிய பதில்
“நயன்தாரா”

(நமக்கு ஒன்னு விளங்கு மாணவனுக்கு இங்கிலீசும் இந்தியும் தெரிஞ்சிருக்கு)

@@@@@@@@@@@@@

டாக்டர் பக்கத்தில எதுக்கு ஒரு மந்திர வாதிய பக்கத்திலேயே
உட்கார வச்சிருக்கார்.

இறந்து போன பேசண்ட் ”ஆவியா” வந்து தொல்ல குடுக்கறாங்களாமா அதுங்கள விரட்ட தான்.

@@@@@@@@@@@@@

உன் புருசன் தொன தொனன்னு பேசிட்டே இருப்பாருன்ன அமைதியா இருக்காரு.

நேற்று தீபாவளிக்கு ஆசையா அல்வா கேட்டாருன்னு செஞ்சு குடுத்தேன்
அப்போதிலிருந்து வாயே திறக்கலையே.

@@@@@@@@@@@@@

நாம எங்காவது அவரசர வேலையா போயிட்டு இருப்போம்
இந்த எடத்துக்கு எப்படிபோறதுன்னு வழி கேட்பாங்க இப்படியும் ஒரு பொது ஜனம் ;

இங்கிட்டு போஸ்டாபீஸ் எங்க இருக்கு

ஒரு கிலோமீட்டர் தாண்டி போகனும்

இரண்டடி வெச்சவன் திரும்ப வந்தான்...

ஒரு கிலோமீட்டர எப்படி தாண்டறது ?.

@@@@@@@@@@@@@

 இன்ஸ்பெக்டர் : திருட்டு DVD யா விக்கிற நட ஸ்டேசனுக்கு

ஐயா...நான் தான் இந்த பட தயாரிப்பாளர்யா... இந்த படத்த இப்படி வித்தாதான் உண்டு.

(என்ன கொடுமை சரவணன்! )
(tks to கி.ரவிகுமார்)
@@@@@@@@@@@@@

காதலி :   நீங்க லவ் லெட்டர் குடுத்த விசயம் எங்க வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு..
காதலன் : ஹையய்யோ உன் தங்கசிக்குமா?

(#எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்! அவ்..)
@@@@@@@@@@@@@

இன்ஸ்பெக்டரிடம் : சார் “பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாம போய் மூணு மாசமாகுது”
அதுக்கு நீ ஏன்யா புகார் குடுக்கிற

அந்த ஆளு புகார் குடுக்காம ஜாலியா சுத்திட்டு இருக்கான் சார்..!
(tks to shahulhamid hamid)

( அதானே அடுத்தவன் சந்தோசமா இருக்கப்படாதே ! 
என்னா ஒரு கொல வெறி !)
@@@@@@@@@@@@@
 அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்குஆகவில்லை. கடைசியாக பணம் தர
வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள்,
அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். தபால் அதிகாரிகள்
இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள்.

ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அதை பார்த்த ஓபாமாவுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த
பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர்
எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும்
அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன் பைய
னுக்கு குஷி தாளவில்லை.

நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான்கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்கள்..
ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல்
அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த ஓபாமா
திருடி விட்டார்.....
(tks to Kanna Kanna)

@@@@@@@@@@@@@
மனைவி நேர தாமதமாக வீட்டிற்கு வந்தாள்... நேராக தனது படுக்கை அறைக்குச்சென்றாள்...
அங்கே,

போர்வைக்கு வெளியே 4 பாதங்கள் தெரிந்தன. உடனே ஆத்திரத்துடன் கிறிக்கெட் மட்டையை எடுத்து தனது ஆத்திரமும், அலரல் சத்தமும் தீரும் வரை அடித்தாள்.

அடித்துவிட்டு சமையலறைப்பக்கம் போனாள்...
அங்கே...

கோப்பி குடித்தபடி கணவர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார்...
மனைவியை கண்டதும்...

"உங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க... நான் எமது படுக்கை அறையை அவர்களுக்கு கொடுத்துவிட்டேன்... "

tks to தமிழ்குளோன்
( வெளிநாட்டில் இது சகஜம் போலிருக்கு! )

பி.கு : நகைச்சுவைகளில் சிலவற்றில் என்னோட டச்சிங் இருக்கு

@@@@@@@@@@@@@

சிலர் நகைச்சுவைகலந்து எழுதுவார்கள் சில பதிவு மொத்தமுமே  நகைச்சுவைகளா தான் இருக்கும்

வலைத்தளம் : ஜோக்காளி,   பதிவர் : பகவான் ஜி KA

ஏக'ப்பட்ட' பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் ?  இந்த தலைப்பில் ஜோக் இருந்தது அதைவிடவும் அந்த ஜோக்கில் இருந்த கேள்விக்கு பதிலை நான் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  அதற்கு அவர்  ஜோக்குன்னா ரசிக்கனும் ஆராயக்கூடாது என்கிறார்.

                                                   @@@@@@@@@@@@@
 வலைத்தளம் : வலிப்போக்கன்   பதிவர் : தோழர் வலிப்போக்கன்

                                             @@@@@@@@@@@@@
 வலைத்தளம் : அவர்கள் உண்மைகள்   பதிவர் : மதுரைத்தமிழன்


தனக்கென சீடர் கூட்டம் வைத்திருக்கும் நகைச்சுவை எழுத்தாளர்  மின்னல் வரிகள் என்ற பேனரில் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுபவர். வாத்தியார் என அன்புடன் அழைக்கப்படும் பாலகணேஷ் அவர்கள்.
இவரின் நகைச்சுவை பதிவுகள் சிரிப்புக்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் விருந்து
காமெடி பதிவுகள் : ஓடுங்க இது உங்களை நோக்கி தான் வருது, (படிச்சிட்டு ஓட சொல்றாரா !)

கொசுவநாத புராணம் (வைரமுத்து ஸார் மட்டும்தான் காவியம், காப்பியம்னுல்லாம் கதைகளுக்குப் பேர் வெக்கணுமா என்ன? நாம ஏன் ஒரு புராணத்தை எழுதக்கூடாது... இது நாஞ்சொல்ல அவரே சொன்னது !)

மோகினிபிசாசும் சரிதாவும் ( பேய இவரு ஓட்டுனாரா இவர பேய் ஓட்டுச்சா..)
ஆனானப்பட்ட கனேஷ் (நகைச்சுவை சிறுகதை)
நான் ரசித்த நகைச்சுவை காட்சிகள்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இவை அனைத்தும் இந்த லிங்கில்.
@@@@@@@@@@@@@

 கு.ஜ.மு.க வில் பொது செயலாளராக இருக்கும்  குடுகுடுப்பை அனுபவக் கதைகளோடு இணைந்த நகைச்சுவை நம்மை யோசிக்க வைக்கிறது. அது என்ன கட்சி புதுசா இருக்கே (கு.ஜ.மு.க  = குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கலகம். (அவ்..)
சாதியும் சான்றிதழும்.
                                                    @@@@@@@@@@@@@

குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும்  என்ற தளத்தின் ஓனர் குட்டன் அவர்கள். தளத்தின் பெயரிலேயே நகைச்சுவை கொப்பளிக்கிறது.
ஷாக் அடிக்காத ஜோக்ஸ்!  சமீபத்திய பதிவு. 

                                                      @@@@@@@@@@@@@

சாதாரணமானவள் என்ற பெயரில் எழுதிவரும் சாதாரணமானவள் என சொல்லிக்கொள்ளும் அசாதாரணமானவர்.
                                                       @@@@@@@@@@@@@

இன்னொரு தளம் வம்புப்பு பையன் விநோத் , பதிவர் ஜேம்ஸ் கே.வினோத்

மிச்சம்  பத்து  ஜோக்ஸ் இந்த லிங்கில் இருக்கு 
நம்பர் போட மறந்திட்டாரா தெரியல 

                                                    @@@@@@@@@@@@@

நண்பர் சுரேஷ் தளிர் என்ற வலைத்தளத்தில் அவ்வப் போது நகைச்சுவைகளை நம்மோடு பகிர்ந்து கொள்வார்.



                                                     @@@@@@@@@@@@@

வலை : சிரிப்பு போலீஸ் பதிவர் : ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா (இது அவருக்கு அவரே கொடுத்த டைட்டில்)

கர்.தூ. இதெல்லாம் ஜோக்கா ?  (இது பதிவோட தலைப்பு !)


                                                      @@@@@@@@@@@@@

தமிழன் களம் என்ற வலைபூவை எழுதிவரும்  வேலன் வேலவன் 

ஆசிரியர் ஜோக்ஸ்

                                                    @@@@@@@@@@@@@


மெளன தேசம் என்ற வலைதளம், பதிவர் :  ரிஷி

கணவன் மனைவி கலாட்டா..! 

@@@@@@@@@@@@@

வலைப்பதிவின் பெயர் சிரியுங்கள்,  பதிவர்  : அப்புக்குட்டி PVS

வாய் விட்டு சிரிங்க.... அழைக்கிறார் இந்த பதிவில்.

@@@@@@@@@@@@@

வலைப்பதிவு : ராஜனின் மசாலா கார்னர்  பதிவர் : காளிராஜன் லட்சுமணன்

புருஷனுக்கு எது பிடிச்சாலும் … அது பொண்டாட்டிக்கும் பிடிக்கணும்..

@@@@@@@@@@@@@

யோசிப்பதற்கு இரண்டு




இந்த இரண்டு படங்களை பற்றிய தகவல்களை நாளை தெரிவிக்கிறேன்.

அன்புடன்,

கலாகுமரன்







மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது